Sunday, February 24, 2008

மழை முடிந்த...

மழை முடிந்த மாலை நேரம்
என் இதயம் நனைக்கும் தென்றலில்
கையில் சிவப்பு ரோஜாக்களுடன்
உனக்காக காத்திருக்கிறேன்.

காற்றில் அலைந்தபடி விழுகிறது
ஒற்றை இலை
உனது கல்லறை மீது.

இன்னும் தூறல் நிற்கவில்லை
எனது நம்பிக்கை போலவே.

No comments: