Friday, April 20, 2012

பிரிவாற்றாமை

நீ ஒன்றும்
பெரிதாய் சாதித்துவிடவில்லை
என் நெஞ்சில் கொஞ்சம் வலியும்,
என் கண்களில்
துளி கண்ணீரும் வரவழைத்தது தவிர.

உன்னுடன்
என் சின்னஞ்சிறு
புன்னகை மட்டும்தானே சென்றது?
நான் இன்னும் வாழ்ந்துகொண்டுதான்  இருக்கிறேன்!

இப்பொழுதெல்லாம்
யோசிக்க நிறைய நேரம் கிடைகிறது
மிகுந்திருக்கும் பொழுதுகளை என்ன செய்வதென்று.

அலுவலகம் செல்லும்முன்
அத்தனை முறை
கையசைத்து, முத்தங்கள் அனுப்பி,
உன்னைப்போல் யாரும்
என் நேரத்தை வீணடிப்பதில்லை.

மணிக்கொருதரம்
உன் செல்லப் பெயர் காட்டி அழைக்கும் தொலைபேசி 
இப்பொழுதெல்லாம் தொந்தரவின்றி துயில்கிறது.

நம் பிரிவின் கடைசி நொடியில்
நாம் இன்னும் இரண்டு வார்த்தைகள் 
அதிகம் பேசி இருக்கலாமோ?
அந்த நேரத்திலா
வார்த்தைகள் தொலைந்து போக வேண்டும்?

என் சட்டையில் உன் முத்தச்சாயம்,
என் மார்பில் உன் கீறல் கிறுக்கல்கள்,
இப்படி எதையுமே சேமிக்காமல்
உன் நினைவுகளோடு மட்டுமே
வாழும் என்னை,கண்ணே....
மீண்டும் எப்போது வந்து உயிர்த்தெழுப்புவாய்?
-Boo