பூனைபோல்
சப்தமற்று
மிக மெதுவாக
என்னில்
கால் பதிக்கிறது
காமம்.
ஆர்ப்பரிக்கும்
கடலலைபோல்,
காமத்தின் கால்தடங்களை
கண நேரமும்
விட்டு வைப்பதில்லை
காதல்!
தோற்றுப்போன காமம்
கரைந்து போன
கால் தடங்களை
விட்டுவிட்டு
கடலில்
கண்ணீர்த் துளிகளை
கலந்துவிட்டுச் சென்றது.
-Boo
Thursday, July 17, 2008
Wednesday, July 9, 2008
நிழல் மண்டிக்கிடக்கிறது
நிழல் மண்டிக்கிடக்கிறது.
இலையுதிர்காலத்தில் இலைகளும்,
வசந்தகாலத்தில் பூக்களும்,
வருடம் ஒருமுறை
சிவப்பு ரோஜாக்களுமாய்,
கடந்துசெல்லும் போதெல்லாம்
வாழ்வின் வெறுமையை
அமைதியாக வாசித்துக்கொண்டிருக்கின்றன,
பெயர் பொறித்த கல்லில்
சுய அறிமுகம் செய்துகொள்ளும்
முகம் தெரியாத
கல்லறைகள்.
-Boo
இலையுதிர்காலத்தில் இலைகளும்,
வசந்தகாலத்தில் பூக்களும்,
வருடம் ஒருமுறை
சிவப்பு ரோஜாக்களுமாய்,
கடந்துசெல்லும் போதெல்லாம்
வாழ்வின் வெறுமையை
அமைதியாக வாசித்துக்கொண்டிருக்கின்றன,
பெயர் பொறித்த கல்லில்
சுய அறிமுகம் செய்துகொள்ளும்
முகம் தெரியாத
கல்லறைகள்.
-Boo
Saturday, July 5, 2008
எனது கேள்விக்கும்
எனது கேள்விக்கும்
உனது பதிலுக்குமான
நீண்ட
மௌனத்தின் பாதையில்
திசைகளற்று
பயணிக்கிறேன்.
எனது
குறுகி நீளும் நிழல்
மறையும் முன்னே
நமை கடந்து சென்ற
மேகம் தூவிய
தூரலில் நனைந்த
உன் இதழ் கொண்டு
குளிர் வார்த்தைகள் தூவி
எனை வரவேற்பாயா?
-Boo
உனது பதிலுக்குமான
நீண்ட
மௌனத்தின் பாதையில்
திசைகளற்று
பயணிக்கிறேன்.
எனது
குறுகி நீளும் நிழல்
மறையும் முன்னே
நமை கடந்து சென்ற
மேகம் தூவிய
தூரலில் நனைந்த
உன் இதழ் கொண்டு
குளிர் வார்த்தைகள் தூவி
எனை வரவேற்பாயா?
-Boo
Subscribe to:
Posts (Atom)