நிழல் மண்டிக்கிடக்கிறது.
இலையுதிர்காலத்தில் இலைகளும்,
வசந்தகாலத்தில் பூக்களும்,
வருடம் ஒருமுறை
சிவப்பு ரோஜாக்களுமாய்,
கடந்துசெல்லும் போதெல்லாம்
வாழ்வின் வெறுமையை
அமைதியாக வாசித்துக்கொண்டிருக்கின்றன,
பெயர் பொறித்த கல்லில்
சுய அறிமுகம் செய்துகொள்ளும்
முகம் தெரியாத
கல்லறைகள்.
-Boo
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment