உன்னைப் பற்றி
கவிதைகள் எதுவும்
எழுதுவதாய் இல்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் கோபங்கள்
என்னை சலனப்படுத்தவில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் சிரிப்பு
என்னை சந்தோஷிக்கவில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் வருகையை
நான் எதிர்பார்த்திருக்கவில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் முத்தங்கள்
எனக்குள் தீ மூட்டவில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் மோகத்தில்
அமிழ்ந்து புதைந்துவிடவில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் கூந்தல் அலையில்
மூச்சுத்திணரவில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் இதழ் ஈரத்தை
ரசித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் உப்பிட்ட சமையலை
ருசித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் தொடுதலில்
நான் தொலைந்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் ரேகைகளின் வழியாக
பயணித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
உனக்காய்
என் நேரத்தை சேமித்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
உன் துயரம்
என்னை அழவைத்ததில்லை
உன்னை காதலிக்கும் வரை
இன்னும்
எத்தனை எத்தனையோ...
நாம்
முட்களை களைந்து
பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறோம்
கீறல்களை மறைத்து
காதல் மலர்கின்றது
அந்த
இனிய வாசத்துடன்
காதலே...
உனக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-Boo