இரவுகளில்
குளிர்காயும்போது
நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...
நீ
விழிமூடி இருக்கும்
பொழுதுகளன்றி
எனை
கூறிய அம்புகளால்
எந்நேரமும் துளைத்து
காயம் செய்துகொண்டிருக்கும்
தருணங்களிலும்...
நெருப்பின்
நாக்குகளைப்போல்
உன் இருள் கூந்தலால்
என் முழுமையும்
தொட்டு...தொடர்ந்து...
உன்
விரல் தீண்டும்
ஸ்பரிசங்களால்
என்
உயிர்த் தொலையும்
கானல் நொடிகளிலும்...
காற்றினை மரிக்கும்
இடைவெளியின் நெருக்கத்தில்
குளிர்காயும் பொழுதுகளிலும்...
நாமிருவரும்
சேர்ந்தே எரிவோம்...
-Boo
Tuesday, May 5, 2009
Subscribe to:
Posts (Atom)