Friday, October 5, 2012

மரணத்தின் விளிம்பில் ஒரு வேண்டுகோள்


அனுப்புனர்:
குடைக்கம்பியின் மழைத்துளி.
 
பெறுனர்:
குடை உரிமையாளர்.
 
வேண்டுகோள்:
சிலிர்க்கும் மழையை மறுத்து
கறுப்புக் குடைக்குள் நடந்தீர்.
வீடு நுழைகையில்
குடையை உதறி
என் நெடிப்பொழுது வாழ்வை
உங்கள் மிதியடிகளில்
முடித்துவிடாதீர்.
தன் ஆயுள் முழுதும்
எங்களோடு கழிக்கும்
குடையோடு
நான் மரிக்க விரும்புகிறேன்.
உதறாமல் செய்வீரா?

-Boo