பறந்து பறந்து
முளைத்த சிறகுகளும்
முறிந்து போயின.
பால் மறந்த மார்புகள்
இப்போதெல்லாம்
இரத்தம் தர பழகிக்கொன்டன.
மொக்குகள் மலராதிருக்க
காற்றே கைவிலங்கிட்டிருக்கிறது.
என் வெற்றிச் சிறுகதை
தலைப்புடனே
முடிந்து போயிற்று.
ஆனாலும்,
உயிர்த்திருக்கிறது
என் முயற்சி மட்டும்.
என்
முறிந்த சிறகை மீறிய
வானம் கடந்து
திரும்பிப் பார்க்கையில்...
அட!
நட்சத்திரங்களுக்கு நடுவில் நான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment