Sunday, March 16, 2008

நெடு நேரமாய்...

நெடு நேரமாய்
எனதருகே அமர்ந்து
கன்னத்தில் கை வைத்தபடி
உன் இதழ் பார்த்து
காத்துக்கிடக்கிறது காற்று

அந்த உறைந்த நொடியில்
உன்
இதழ் விரித்து பதில்கிறாய்
"ஆமாம், நானும் உன்னை..."

இருவரின் சம்மதத்துடன்
கையெழுத்தாகிறது
நமது
விவாகரத்துப் பத்திரம்.

No comments: