Sunday, March 2, 2008

பால்ய காலத்து சிநேகிதன்

பால்ய காலத்து சிநேகிதன்
எதிர் வந்த பேருந்தின்
முன் இருக்கையில்,
என்னைப் போலவே.

இருவர் முகத்திலும்
பரவச அலைகள்.

அடுத்த கணம்
அவனுக்கு மிக அருகில் நான்.

அவனும் இறந்து கொண்டிருந்தான்
என்னைப் போலவே.

No comments: