Friday, March 28, 2008

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்

அந்தப் புத்தகங்கள் அனைத்தும்
கிலோ ஐந்து ரூபாய்க்கு மட்டுமே
விலை போனதாய்
உன் கணவனிடம்
அலுத்துக்கொண்டாய்,
உள்ளிருப்பவை அனைத்தும்
உன்னைபற்றிய
என் கவிதைகள்
என்றறிந்தும்...!

கவனமாய்
சேகரித்திருக்கிறாய்
என் நிழல் கூட இல்லாத
உன் திருமண புகைப்படங்களை.

உறுதிசெய்துகொள்கிறேன்.
உனது எந்தக் குழந்தைக்கும்
எனது பெயரை
வைத்துவிடவில்லை..

நாம் அமர்ந்திருந்த
உனது வரவேற்பறையின்
அமைதியை
ஜன்னல் திரைச்சீலைகள் மட்டுமே
கலைத்துக்கொண்டிருந்தன.

நான் கிளம்பும்முன்
ஏன் தாடி வளர்கிறாய் என்று
எதேச்சையாய் கேட்டாய்...
உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்

அன்று
உன் இதழ் பதித்து
உரமிட்ட
என் கன்னங்கள்
இன்று
அமோகமாய்
தாடி வளர்க்கின்றன.


-Boo

No comments: