மழை பெய்துகொண்டிருக்கிறது...
வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டு
அரைகுறையாய் நனைந்தபடி
காகிதப் படகுகள் செய்து
அவைகளுக்கு
வெள்ளத்தில்
நீந்த கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்...
இரண்டு வீடுகள் தள்ளி
உன்மேல் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளிகளை ரசித்துக்கொண்டே
நீந்தி வரும்
காதல் கடிதங்களை
சேமித்தபடி நான்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment