Sunday, February 10, 2008

எனக்கான காத்திருப்பில்...

எனக்கான காத்திருப்பில்
உன் கன்னம் கடந்தக் கண்ணீர்
நம் காதலின்
பாரம் சுமந்து
பூக்களின் மீது விழும்போது
எழுந்த காற்று
தூரத்தில் என்னிடம்
உனது தனிமையை
அழுதுவிட்டுச் சென்றது...

மழைத்துளி விழுந்தாலும்
வாசம் தராத
போர்க்களத்தின் பாசறையில்
கறை படிந்த வாட்களோடும்
தீர்ந்து போன
உன் வாசத்தோடும்
சுகித்திருக்கிறேன்...

உன் தனிமையும்
கண்ணீரும்
தீரும்முன்
உன் கூந்தலில் சூட
வாகையோடு வருகிறேன்...

அதுவரை
தேயும் நிலவினை விடுத்து
கண்ணே
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இரு!

No comments: