Sunday, February 10, 2008

ஆடைகள் வேண்டி...

ஆடைகள் வேண்டி
வானம் நோக்கி தவம் செய்கின்றன
முன்பனி காலத்து
நிர்வாண மரங்கள்...

பனிக்காலத்து இரவுகளில்
வெட்கம் பூசிய உன் கண்கள்
என்னை நோக்கி தவம் செய்கின்றன
என்னையே வேண்டி...

மகிழ்ந்த வானம்
பனியால் மூடத்தொடங்குதிறது
மரங்களை...

நானும்...

No comments: