Sunday, February 10, 2008

அரங்கமே...

அரங்கமே
என் சிதார் இசையைக் கேட்க
காத்துக்கொண்டிருக்கிறது…

என் சிதாரின்
ராகமாலிகையோ
உன் கொலுசொலியை கேட்டு
உன் காலடியிலேயே
மயங்கிக்கிடக்கிறது…

நான்
இதழ்களால்
உனை கெஞ்சுகிறேன்...
நீ
இமைகளால் புன்னகைக்கிறாய்...

என் சிதார்
இசைக்கத் தொடங்குகிறது...

No comments: