Sunday, February 10, 2008

பிழைப்பு

சிவந்துவிடாதிருக்க
நான்
மஞ்சளிட்டுக்கொள்கிறேன்...

என் இதழ்களை
ஈரமாக்கிக்கொள்கிறேன்...

எனது கண்களில்
மையிட்டுக்கொள்கிறேன்...

கதவின் ஓசை கேட்டு
மிரண்ட வெட்கத்தை
கண்மூடி இருக்கச் சொல்லிவிட்டு
முதன் முறையாய் தாழ் திறக்கிறேன்.
வெளியே...யாரோ!

இரண்டு சாமம் முடிந்து
மூன்றாவதாய் கதவு திறக்கையில்
வெட்கம்
இருட்டறையின் மூலையில்
கண்ணீர் கறையுடன்
உறங்கிவிட்டிருந்தது...

மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறேன்
காலையில் வீடு திரும்புகையில்
இனிப்பு வாங்கிச் செல்லவேண்டும்!
தலைக்கு நானூறு வீதம்
நேற்று இரவு
எனது முதல் நாள் சம்பளம்
ஆயிரத்து இருநூறு ரூபாய்...!

1 comment:

Unknown said...

Boss !! Situation-ey puriyala..konjam tamil le yeluthunga appo than yellarukum puriyum