மெதுவாகத்தான் வீசுகிறது காற்று
ஆனாலும்
இலைகளால் இருக்க முடிவதில்லை.
என் கனிந்த இதயத்தை போலவே
உன் பார்வை பட்டதும்
உதிர்ந்து விடுகின்றன.
இலைகளிழந்து நிற்கிற
எனை பார்த்து
கை கொட்டி சிரிக்கின்றன
உனது விழிகள்
இது வசந்த காலமென்று!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment