அந்த அழகான ஓவியங்களுக்கு
என்ன பெயர் வைக்கலாம் என்று
யோசித்து கொண்டிருக்கும்போதே
கடல் அலை ஒன்று
என் அனுமதி இல்லாமல்
அபகறித்துச் சென்றது
உன் கால் தடங்களை...
கோபித்த என்னிடம்
கூறிவிட்டுச் சென்றது...
இனிமேல்
உன் கால் தடங்கள் இல்லாத
கடற்கரைக்கு
அவை வருவதில்லையாம்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Intha kavithey mikka azagaaha irukinrathu pulavar perumaaney
Post a Comment