Sunday, December 19, 2010

தூறலின் துளிகள்

தூறலின் துளிகள்
ஜன்னலில் வரைந்த
நீர்க்கோடுகளை
விரல்களால் தொடர்ந்துகொண்டே
மழைக்கால பேருந்துப்பயணம்...

வழிநெடுக
நீர் நிரம்பிய
குளங்களும் கிணறுகளும்
சிறுவர்களுக்கு
நீச்சல் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்க

பள்ளியில்
மதிய நேர
கணக்கு வகுப்புகளை மட்டும்
கட் அடித்துவிட்டு
கிணற்றில் ஊறிய ஞாபகம்.

டயர் ட்யூபில்
மிதந்த சிறுவன்
பேருந்தை பார்த்து
டாட்டா காட்டுகிறான்

நினைவுகளில் மிதந்துகொண்டு
நானும்
கையசைக்கிறேன்
அனிச்சையாய்!
-Boo

No comments: