தென்றலில் மயிலிறகுபோல்
அசைகிறாய்
என்னை தொட்டுவிடாமல்
உரசிச்செல்லும்
உன் மூக்கின் நுனி
என் வியர்வை துளிகளை
எரித்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் வெப்பம்
உன்னில் உதித்து
என்னில் கடந்து
உன்னிலே முடியும்
இரத்த ஓட்டம்
மங்கி எரியும்
விளக்குகள் நிறைந்த தெருவின்
அமைதியை
சன்னமாக கலைக்கும்
உன் சிணுங்கல்
உன்னில் தொலைத்துக்கொண்டிருக்கிறேன்
என் தனிமை இரவுகளை!!!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
karpanaihal rombha nalla illatha mathiri enakku oru feeling... :-)
Post a Comment