Tuesday, July 6, 2010

தென்றலில் மயிலிறகுபோல்

தென்றலில் மயிலிறகுபோல்
அசைகிறாய்

என்னை தொட்டுவிடாமல்
உரசிச்செல்லும்
உன் மூக்கின் நுனி

என் வியர்வை துளிகளை
எரித்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் வெப்பம்

உன்னில் உதித்து
என்னில் கடந்து
உன்னிலே முடியும்
இரத்த ஓட்டம்

மங்கி எரியும்
விளக்குகள் நிறைந்த தெருவின்
அமைதியை
சன்னமாக கலைக்கும்
உன் சிணுங்கல்

உன்னில் தொலைத்துக்கொண்டிருக்கிறேன்
என் தனிமை இரவுகளை!!!

1 comment:

Karthick said...

karpanaihal rombha nalla illatha mathiri enakku oru feeling... :-)