Friday, June 4, 2010

உன் உயிர் சுமந்து வரும்

உன்
உயிர் சுமந்து வரும் கடிதங்களின்
கண்ணீர் கறை படிந்த பக்கங்களில்
நீ எழுதி முடிக்காத
மௌன வார்த்தைகளின்
அர்த்தங்களை மொழிபெயர்த்துக்கொண்டு
நமக்கிடையேயான தூரத்தினை
காற்றினிலேறி கடந்துகொண்டிருக்கிறேன் ...

தென்றலால் உன் கண்ணீர் துடைக்க
மௌவ்வல்கள் முத்தங்களோடு
மாலையில் மலரும்.

அதுவரை காத்திரு...

-Boo

No comments: