மொட்டவிழ்க்காத மலர்கள்
சேமித்து வைக்கின்றன
வாசனையை...
பொழிந்திடாத மேகம்
சேமித்து வைக்கிறது
முதல் மழைத்துளியை...
வெள்ளை குளிர்காலம்
சேமித்து வைக்கிறது
வசந்தத்தின் வண்ணங்களை...
தூரிகைகள்
சேமித்து வைக்கின்றன
அழகான ஓவியங்களை...
வாசனையும் மழைத்துளியும்
வண்ணங்களும் ஓவியமும்
பிறக்கும் நொடிகள்
சேமித்து வைத்திருக்கின்றன
முதல் குழந்தை பெற்றெடுக்கும்
தாயின் சந்தோசங்களை....
அதுபோல்
என் முதல் முத்தமும்....
-Boo
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment