Thursday, November 6, 2008

மேகம் நீங்கிய மழைத்துளி

மேகம் நீங்கிய
மழைத்துளி ஒன்று
பயணிக்கிறது
செம்புலம் நோக்கி

திசைகளற்ற பயணம்
இன்னும் நீட்டிக்கிறது
தூரத்தின் நீளத்தை

அலைக்கழிக்கும் காற்று
கேள்விக்குறிகளாக்குகிறது
சென்று சேர்வதற்கான
மழைத்துளியின்
நம்பிக்கையை

தனிமையின் துயரம்...
விரக்தியின் விளிம்பில்
கண்ணீர் சிந்துகிறது
மழைத்துளி

கண்ணீர்த்துளி
மழைத்துளியின்
சுயத்தின்
பிரதிபலிப்பு

இப்போது
மழைத்துளிக்கு
ஆதரவாய்
கண்ணீர்த்துளி

தனிமை தொலைந்த பயணம்
தூரத்தின் நீளத்தை
அர்த்தமற்றதாக்குகிறது

துளிகளில்
துளிர்க்கிறது
நம்பிக்கை
தூரத்தில் தெரிகிறது
செம்புலம்.
-Boo

No comments: