Monday, November 3, 2008

வனவாசம்

பகல் முழுதும் அலைந்து திரிந்து
இரவு தாமதித்து வீடு சேர்ந்தனர்
ராமனும், லக்ஷ்மனும், சீதா தேவியும்.

களைப்பின் மிகுதியில் ராமன்
கயிற்றுக்கட்டிலில் சயநித்திருக்க...

அரிசி களைந்து
அடுப்பில் இட்டுக்கொண்டிருந்த
சீதாவின் கண்களில் புகைக்கண்ணீர்.

இன்றைய வருமானம்
இந்த வாரத்தின் மிகக் குறைவென
மழையையும் ராமனையும்
அலுத்துக்கொண்டிருந்தான்
லக்ஷ்மணன்.

உதவும் அணில்கள் அற்ற
கடற்கரை சேரியின் உப்புக்காற்றில்
நைந்துபோன கட்டிலின் நைலான் கயிறு,
காலையில் பூசிய நீல வர்ணத்தை அழித்து,
நாளை பற்றிய கவலைகளோடு
தூங்கிக் கொண்டிருந்த ராமனின் முதுகில்
கோடு கிழித்துக்கொண்டிருந்தது...

-Boo

No comments: