Thursday, September 13, 2012

ஞாபக மிட்டாய்


அரைகுறை வெளிச்சத்தில்
கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி இருந்ததில்  
ஏதோ ஒன்றைக் காட்டி
மழழையில் சிணுங்கிய சிறுவனுக்கு
விலை ஏதும் கேட்காமல்
அந்த அப்பா வாங்கிக்குடுத்த 
பொம்மைப்படம் போட்டக் கடிகாரம்,

பீப்பி ஊதிக்கொண்டு
மதிய நேரத்தில்
எங்கள் வீடு கடக்கும் மிட்டாய்க்காரர்,
மூங்கில் கழியின் உச்சியில்
அழுக்குப் பாவாடை அணிந்த
கண்கள் சிமிட்டும் பொம்மைக்குக் கீழே
வெள்ளை-சிவப்பு வர்ணத்தில்
பிசுபிசுக்கும் மிட்டாயில் செய்து
என் வலக்கையில் ஒட்டிவிட்டுப்போன  
அந்த கடிகாரத்தைப் போல்
வருடங்கள் பல கழித்தும்
இனித்துக் கொண்டிருக்குமா?
தெரியவில்லை!

-Boo

No comments: