Tuesday, July 17, 2012

எனக்கு அழுவது மிகப்பிடிக்கும்

எனக்கு அழுவது மிகப்பிடிக்கும்.

ஒருபோதும் தனிமையில் அழுவதில்லை நான்!
என்னுடன் எப்போதுமே அழுகின்றன,
வலிமையின் முன் என் இயலாமையும்,
நம்பிக்கையின் முன் என் ஏமாற்றமும்,
வெற்றியின் முன் என் அவமானமும்,
இன்பத்தின் முன் என் வெறுமையும்,
இருளில் எனைச்சுற்றி நிறைந்திருக்கும்
என் நிழலும்.

கண்ணீர் காய்ந்து போனாலும் 
அது விதைத்து விட்டுச்செல்லும் கசப்பினோடு,
யாருமில்லா கடற்கரையில்  
உப்புக்காற்றின் துவர்ப்பினையும் சுவைத்தபடி,
அழுவது எனக்கு மிகப்பிடிக்கும்.   

- Boo








1 comment:

Anonymous said...

அழ பிடித்த என் சகாவிற்கு

உன் வலிமையின் தோள்கள் மலரட்டும்
உன் நம்பிக்கையின் வேர்கள் துளைக்கட்டும்
உன் வெற்றியின் செய்திகள் ஒலிக்கட்டும்
உன் இன்பத்தின் காலம் நீளட்டும்

உன் கண்ணீர் மங்கி புன்னகை நிலைக்கட்டும்

சகா…. ஒளிஅபயன்