Tuesday, August 11, 2009

நீண்டும் ஒடிந்தும்

நீண்டும் ஒடிந்தும்
சேர்ந்தும் பிரிந்தும்
வளைந்தும் நெளிந்தும்
நின்றும் கிடந்தும்
திரிந்தும் பிணைந்தும்
கிடக்கும்
ஒற்றையடிப் பாதைகள் போன்ற
உன் உள்ளங்கை ரேகைகள் மீது
என் விரல்களால்
ஊர்ந்து கொண்டே இருக்கிறேன்

தயவு செய்து
என்னைத் தொலைத்துவிடு
நான்
வீடு போய்ச் சேரவேண்டும்...

-Boo

No comments: