நீண்டும் ஒடிந்தும்
சேர்ந்தும் பிரிந்தும்
வளைந்தும் நெளிந்தும்
நின்றும் கிடந்தும்
திரிந்தும் பிணைந்தும்
கிடக்கும்
ஒற்றையடிப் பாதைகள் போன்ற
உன் உள்ளங்கை ரேகைகள் மீது
என் விரல்களால்
ஊர்ந்து கொண்டே இருக்கிறேன்
தயவு செய்து
என்னைத் தொலைத்துவிடு
நான்
வீடு போய்ச் சேரவேண்டும்...
-Boo
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment