வெள்ளிக்கிழமை
கோவில் வாசலில்
மாநிறமாய்
சுருள்க்கூந்தலுடன்
மஞ்சள் புடவையில்
உயரமாய் உனது ஒரு அம்மா...
சனிக்கிழமை
காய்கறிக்கடையோரம்
சற்றே பருமனாய்
பெரிய கண்களுடன்
அழுக்கேறிய சிவப்பு புடவையில்
உனது இன்னொரு அம்மா...
ஞாயிறு மாலையில்
கடற்கரையில்
ஒடிசலாய்
குளிர்க்காற்றில் இருமியபடி
மங்கிய கண்களுடன்
வேறொரு அம்மா...
உனது
அத்தனை அம்மாக்களுடனும்
பசியில்
அழுது ஓய்ந்த
கண்ணீர்க்கண்களுடன் நீ...
எனது
கருணை நாணயங்கள்
உன் பசியையும் கண்ணீரையும்
ஒருபோதும்
போக்கப்போவதில்லை என்றறிந்தும்
உனது அம்மாக்களின் தட்டில்
இரண்டு ரூபாய் வீதம்
உனக்காக
ஆறு ரூபாய் இழந்திருக்கும் நான்...
-Boo
கோவில் வாசலில்
மாநிறமாய்
சுருள்க்கூந்தலுடன்
மஞ்சள் புடவையில்
உயரமாய் உனது ஒரு அம்மா...
சனிக்கிழமை
காய்கறிக்கடையோரம்
சற்றே பருமனாய்
பெரிய கண்களுடன்
அழுக்கேறிய சிவப்பு புடவையில்
உனது இன்னொரு அம்மா...
ஞாயிறு மாலையில்
கடற்கரையில்
ஒடிசலாய்
குளிர்க்காற்றில் இருமியபடி
மங்கிய கண்களுடன்
வேறொரு அம்மா...
உனது
அத்தனை அம்மாக்களுடனும்
பசியில்
அழுது ஓய்ந்த
கண்ணீர்க்கண்களுடன் நீ...
எனது
கருணை நாணயங்கள்
உன் பசியையும் கண்ணீரையும்
ஒருபோதும்
போக்கப்போவதில்லை என்றறிந்தும்
உனது அம்மாக்களின் தட்டில்
இரண்டு ரூபாய் வீதம்
உனக்காக
ஆறு ரூபாய் இழந்திருக்கும் நான்...
-Boo
4 comments:
aiyo... superb!
Boopathi, summa solla koodathu, samudhaya kodumaiya, kuzhandaiya vachu pitchai edukaratha vithyasamana anugumuraila pathu irukeenga..i'm rating this as your best till date..congrats..
gooood one man !!
keep goin ..
unga kitta irunthu innum neraya ethirparkirean ..
Post a Comment